சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனிப்பட்ட பாடி லாங்குவேஜ் இருக்கும். ஆனால், தனது வித்யாசமான சிரிப்பையே தனது தனிப்பட்ட அடையாளமாக வைத்து சினிமாவில் கலக்கியவர் பிரபல காமெடி நடிகரான முறைமுத்து. மக்களை சிரிக்க வைக்க காமெடியன்கள் தனது காமெடிகள் மூலம் கஷ்டப்பட்ட நிலையில் வெறும் சிரிப்பை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரே நடிகர் என்றால் அது குமாரி முத்து தான் என்று சொன்னால் அது மிகையாகாது. நாகர்கோவிலில் பிறந்த இவர், கடந்த 1979 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரி பூக்கள்’ அறிமுகமானார்.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்தார் குமரிமுத்து, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் துவங்கி விஜய், அஜித் வரை பல்வேறு தலைமுறை நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் குமரிமுத்து. இறுதியாக விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார் குமரிமுத்து. அதன் பின்னர் உடல் நலக்குறைவால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

Advertisement

நடிகர் குமரிமுத்து தனது 75 வது வயதில் கடந்த 2016 ஆம் பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி காலமானர். மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரிமுத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குமரிமுத்துவின் மறைவிற்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும், குமரிமுத்துவின் உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குமரிமுத்துவின் கல்லறையை நேரில் சந்தித்த போது மனதை நெகிழவைக்கும் வகையில் அவரது கல்லறையில் ஒரு வாசம் பொறிக்கப்பட்டிருந்தது.அவரது கல்லறையில், Its Time For The God, To Enjoy His Laughter அதாவது, இது கடவுளுக்கான நேரம், இவரது நகைச்சுவை அனுபவிக்க என்று எழுதப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகள் நம்மை சிரிக்கவைத்த இவரது நகைச்சுவையை மறக்காமல் குமரிமுத்துவின் குடும்பத்தினர் இப்படி கற்பனை திறனுடன் அன்புகலந்து எழுதியுள்ளதை கண்டு வியப்படைந்தோம்.

Advertisement

இதில் இதைவிட கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில். குமரிமுத்துவின் மறைவிற்கு பின் உயிரிழந்த பிரபல இயக்குனர் மகேந்திரனின் கல்லறைக்கு அருகில் தான் குமரிமுத்துவின் கல்லறையும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இயக்குனர் மகேந்திரன் ஒரு முத்திரையை பதித்த இயக்குனர் ஆவர். இவர் தமிழில் முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். அதே போல இறுதியாக சாசனம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

Advertisement

அதன் பின்னர் படங்களை இயக்குவதை விட்ட இவர் தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.  இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய அனேக திரைப்படங்களில் குமரிமுத்துக்கு மிகச்சிறப்பான வேடங்கள் கொடுத்திருப்பார் எப்படி இருவரும் ஒரே இடத்தில் அடங்கினார்கள் என்பது ஒரு வியப்பான ஒற்றுமை தான்.

Advertisement