நடிகர் ஆர்யாவுக்கு விவாகரத்து பெற்ற ஒரு இலங்கை பெண்ணுடன் கல்யாணமா ! - விவரம் உள்ளே

By Ashok · 5/3/2018
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து கொண்டிருப்பதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் குறிப்பிட இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஒரு வீடியோவை வெளியிட்டார் நடிகர் ஆர்யா. தற்போது அதற்காக ஒரு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் சேனலில் நடந்து வருகிறது. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்பவர்கல் ஆர்யாவுடன் டேட்டிங் சென்று அவருக்கு பிடித்தருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம். தற்போது இந்த நிகழ்ச்சி முடிவை எட்டியுள்ளது. 16 பெண்களில் கடைசியாக இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு பெண்களை தேர்வு செய்தவர் நடிகை வரலட்சுமி ஆவார். ஒருவர் பெயர் ஸ்வேதா. இன்னொருவர் பெயர் சூசன்னா. இதில் சூசன்னா இலங்கையை சேர்ந்த பெண் ஆவார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்யாவையையும் இம்ப்ரெஸ் செய்துவிட்டால் அவருக்கு அவரை திருமணம் செய்துகொள்லும் பாக்கியம் கிடைக்கும்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full