சினிமா மற்றும் சீரியல் துறையில் பிரபலங்களின் தற்கொலை சம்பவங்கள் தொடராகதையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த “யாகவரையினும் நாகாக்க “ என்ற படத்தில் துணை நடிகராக நடித்த சித்தார்த் என்பவரின் மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரளாவை சேர்ந்த சித்தார்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்மிரிஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் மதுரவாயல் அருகில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்த்து அட்டைகள் மற்றும் வரவேற்பு அட்டைகளை டிசைன் செய்து கொடுக்கும் வேலையை வீட்டிலேயே செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் சித்தார்த்திற்கும், ஸ்மிரிஜா ஏதோ சண்டை வந்துள்ளது. பின்னர் நேற்று காலை வேளையில் சித்தார்த் வீட்டின் கதவு பூட்டியிருப்பதை கண்டு கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சித்தார்த் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் ஸ்மிரிஜா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சியாகியுள்ளனர்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சித்தார்த்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிதர்த்திற்கும், ஸ்மிரிஜாகும் அடிக்கடி சண்டை வந்துள்ளது, நேற்று இருவரும் உணவகம் ஒன்றிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் வழியில் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இதனால் இரவு ஸ்மிரிஜா தனியாக படுத்துக் கொண்டுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று அவரது கணவருக்கே தெரியவந்ததுள்ளது. இந்த தற்கொலைக்கு கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனை தான் காரணமா இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement