கவலை வேண்டாம், துருவங்கள் 16 போன்ற படங்களில் ஓரமாக நடித்து பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.  தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ மஹத்துடன் ஒரு படம் என்று படு பிஸியாக இருந்து வருகிறார்.

Advertisement

மேலும், தற்போது இவரை பல லட்சம் பேர் சமுக வலைதளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே அம்மணி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருவதால் தான். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் புகைபிடிப்பார் என்று பல ஆதாரங்கள் வெளியானது.

இந்த நிலையில் கையில் ஒரு பாக்கெட் சிகிரெட்டுடன் இருப்பது போல ஒரு செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் யாஷிகா. இதனை கண்டு அவரது ரசிகர்கள் அதிர்ந்து போகினர். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது செல் போன் கவர் என்று.

Advertisement
Advertisement