கவலை வேண்டாம், துருவங்கள் 16 போன்ற படங்களில் ஓரமாக நடித்து பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நடிகர் மஹத்துடன் காதலில் விழுந்தார். ஆனால், மஹத் பராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வந்ததால் யாஷிகாவின் ஆசை வீணாக போனது. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

இதையும் படியுங்க : சன் மியூசிக் ஹேமா சின்ஹா கணவர் இவரா.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! 

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இருவரும் நெருக்கமான பழக்கத்தில் தான் இருந்து வருகின்றனர். அதே போல இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் நடுவார்களாகவும் பங்கு பெற்றனர்.

இந்த நிலையில் மஹத் மற்றும் யாஷிகா பைக்கில் ஊர் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. ஆனால், இந்த புகைப்படம் இவர்கள் இருவரும் நடித்து வரும் படத்தின் போது எடுக்கபட்டது என்று பின்னர் தான் தெரியவந்தது.

Advertisement
Advertisement