இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்தில் ஆக்ஸ்ட் மாதம் துவங்கியது. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சிம்புதேவன் இயக்க, இயக்குனர் ஷங்கர் தயாரித்து வந்தனர்.

ஆனால், இந்த படத்தில் சம்பள பிரச்சனை காரணமாக வடிவேலுவிற்கும் படக்குழுவிற்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. அந்த பிரச்சனை எப்படியோ சுமகமாகி வடிவேலு மீண்டும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், மீண்டும் முருங்கை மரம் ஏறி அதிக சம்பளம் கேட்கிறாராம் வடிவேலு.

இதையும் படியுங்க : வடிவேலுவின் மருமகள் இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவரா.! தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.! 

Advertisement

சம்பள பிரச்சனை காரணமாக வடிவேலு கதாநாயகனாக நடிக்க வேண்டிய படங்கள் யோகி பாபு வசம் மாறுகின்றன. ஆனால், 23 புலிகேசி இரண்டாம் பாக விவாகரத்தில் வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகவும், விரைவில் ஷூட்டிங் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இந்தபடத்தில் நடிக்க சுமார் நான்கு கோடி ரூபாய் வரை கேட்கிறாராம். தயாரிப்பாளர்கள் சம்பள பணத்தை குறைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும். அவர் கீழ் இறங்கி வரவில்லை. அதனால் தயாரிப்பாளர்கள் எல்லாம் வடிவேலுவை புக் செய்யாமல் அதற்கு பதிலாக யோகி பாபுவை புக் செய்து வருகின்றனராம்.

Advertisement
Advertisement