கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் யோகி பாபுவின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் எப்போ?எப்போ? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் வந்து இருந்தது. தற்போது ஒரு வழியாக நடிகர் யோகி பாபு அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பிரபல பத்திரிகைக்கு நடிகர் யோகி பாபு தன் மனைவி குறித்து பேட்டி அளித்து இருந்தார்.

இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், தனது திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை என்று கோபித்துக்கொள்ள வேண்டாம் என்று கூறிய யோகி பாபு திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி வைத்து அனைவரையும் அழைப்பேன் என்று கூறி இருந்தார். இவர்களுடைய திருமண வரவேற்பு விழா மார்ச் மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறதாம். தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் நேரில் சந்தித்து அழைப்புதழ் கொடுப்பதில் ஒரு பக்கம் யோகி பாபு பிசியாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தை,  நேரில் சந்தித்து திருமண வரவேற்பு பத்திரிக்கையை கொடுத்துள்ளார்.

Advertisement

யோகி பாபுவின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் தான் திட்டமிட பட்டிருந்தது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள திருமணம் மண்டபங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் என்று அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தான் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் தேதி மாற்றி அமைக்கப்ட்டுள்ளதாம்.

Advertisement