அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்‘ படத்தின் டீஸர் மாலை செப்டம்பர் மாதம் 21ம் தேதி மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இதற்கு இணையதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

படத்தில் “நீ பற்றவைத்த நெருப்போன்று பற்றி எரிய உனை கேட்கும். நீ விதைத்த வினை எல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்” என்று விஜய் டீஸரில் பேசிய வசனத்தைக் குறிப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர், மருத்துவர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விஜய். பிரம்மாண்டமான காட்சியமைப்பு, நடனம், மேஜிக் காட்சிகள் என இடம்பெற்றுள்ள டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் படத்தின் டிரெய்லருக்காக காத்திருக்கின்றார்கள்.
மெர்சல் டீசருக்கு பின்னர் மெர்சல் பட டைட்டில் பிரச்சனையை தொடர்ந்து போடப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

Advertisement

Advertisement

ஒருவேளை படத்தின் தலைப்பை பயன்படுத்த தடை விதித்தால் படத்தில் வரும் பாடலின் வரிகளான “ஆளப்போறான் தமிழன்” படத்தின் டைட்டலாக வைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

இந்த வாரத்தின் இறுதிக்குள் மெர்சல் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவுள்ளது.

Advertisement