முதல்வரை சந்தித்து ஜீ தொலைக்காட்சி நிறுவனம் செய்துள்ள மிகப்பெரிய உதவி - குவியும் பாராட்டு.

By Rajkumar · 31/8/2020

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. இதனால் சில மாதங்களாகவே அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது மத்திய அரசாங்கம். சமீபத்தில் தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் சில அறிவுரைகள் படி நடத்த அனுமதி அளித்துள்ளது. அந்த படப்பிடிப்பில் 60 பேரை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு துவங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தமிழக அரசு போட்ட உத்தரவின்படி படப்பிடிப்பை தொடங்கி உள்ளது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும்  ஒரு சில நிகழ்ச்சிகள், ஜீ தமிழ் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது. 

அந்த வகையில் சமீபத்தில் பிரபல இனைய தளம் ஒன்று இந்த மாதம் அதிக TRP கொண்ட தொடர் எது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த மாதம் டாப் 5 இடத்தை பிடித்த தொலைக்காட்சியின் விவரத்தையும் அந்த வலைத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' தொடர் சன் டிவியின் அணைத்து தொடர்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

https://twitter.com/ZeeTamil/status/1300307250397892609

இப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி சார்பாக கொரோனா பாதிப்பிற்கு உதவும் வகையில் உதவி செய்யப்பட்டுள்ளது. ஜீ தமிழ் நிறுவனம் சார்பாக 45 ஆம்புலன்ஸ், 12, 500 PPE கிட்ஸை அரசுக்கு வழங்கியுள்ளனர். உதவியை தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அளித்துள்ளது ஜீ நிறுவனம். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full