தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு.பழனியப்பன். பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இவர் முதன் முதலாக இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்கி இருக்கிறார். சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதில்லை ஆனால், தமிழா தமிழா மூலம் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். நீயா நானா நிகழ்ச்சிக்கு பின்னரே இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதனால் அடிக்கடி நீயா நானா நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு இந்த நிகழ்ச்சியை கலாய்த்தும் வந்தனர்

அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீயா நானா நிகழ்ச்சியில் சம்பாதிக்கும் மனைவிகள் மற்றும் அவரது கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் கோபிநாத் பேசிய ‘ஆனந்தமாக வாழ அறிவாக இருக்க அவசியம் இல்லை’ போன்ற வசனங்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. அதே போல ஒரு தந்தையின் ஏக்கத்தை புரிந்துகொண்ட கோபிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர் .

Advertisement

இந்த நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கருபழனியப்பனை பலர் கேலி செய்து வந்தனர்.கருப்பு பழனியப்பனின் தமிழா தமிழா நிகழ்ச்சி கேலிக்கு உள்ளாகி இருக்கும் மற்றொரு முக்கிய காரணமே நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் பெரும்பாலும் யாரையும் உரிமையில் பேசுவது கிடையாது. அதேபோல விவாதங்களில் பெரும்பாலும் மக்கள் நினைக்கும் கருத்துக்களையே கோபிநாத் முன்வைத்து வருகிறார்.

கரு.பழனியப்பன் ட்விட் :

இப்படி ஒரு நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அதில் ‘ஜீ தமிழ் உடனான நான்கு வருட” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. நன்றி ஜீ தமிழ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

வா தமிழா வா :

இதனையடுத்து கரு.பழனியப்பன் கலைஞர் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுததார். இந்த நிகழ்ச்சியானது நாள்தோறும் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இவை ஒருபுறம் இருக்கு கரு.பழனியப்பன் விலகியதால் இந்த நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களாக ஒளிபரப்ப படாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் மீண்டும் தமிழா தமிழா ஒளிபரப்ப படவேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.

Advertisement

மீண்டும் தமிழா தமிழா :

அப்படிப்பட்ட நிலையில் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தமிழா தமிழா நிகழ்ச்சியானது மீண்டும் புது தொகுப்பாளருடன் ஒளிபரப்பாக இருக்கிறது. அதாவது இந்த நிகழ்ச்சியை தனியார் ஊடகத்தில் சிற்ப்பான நேர்காணல்களை நடத்தி தனக்கென ஒரு அடையாளத்தை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்கி வைத்துள்ள ஆவுடையப்பன் தான் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளராக வர உள்ளார். இதற்க்கான ப்ரோமோ நேற்று இரவு வெளியாகி இருந்தது குறிப்பிடதக்கது.

Advertisement