கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களது நல்ல குணத்தால் மக்கள் மனதை வென்று தனக்கான பிரபலத்தை தேடிக்கொண்டனர் . ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் தன்னிடம் உள்ள எதிர்மறையான விஷயங்களின் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்து ,அதன் மூலம் பிரபலத்தை ஏற்படத்திக் கொண்டு இப்படியும் பிரபலமாகலாம் என்று மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். அது வேறு யாரும் இல்லை நம்ம ஜூலி தான்

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டு பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள்,டிவி ஷோக்கள் என்று பல வைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஓடி விளையாடு பாப்பா என்ற குழந்தைகள் நடன நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

இவர் ஏற்கனவே சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகைரா என்ற படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது உத்தமி என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இதை விட கொடுமையான விஷயமாக சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்க போகிறார் என்று ஒரு சில போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை வெறுப்பேற்றியது.

Advertisement

Advertisement

தற்போது உத்தமி படத்தை K7 ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்தில் யாரை கதாநாயகனாக போடுவது என்று பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். அதன்படி பிரபல தொகுப்பாளர் ஒருவருரிடமும் , உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் ,முன்னணி நடிகர் ,வெள்ளித்திரை நடிகர் என்ற 4 பேரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்

Advertisement