தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளை விட 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் இருந்த நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை. 90ஸ் காலகட்டத்தில் வந்த அனைத்தும் நடிகைகளும் அழகும் திறமையும் கொண்ட நடிகைகளாகவே இருந்தனர். அந்த வகையில் நடிகை கௌசல்யாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. விஜய், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர்.

தமிழில் இவர் முரளி நடிப்பில் வெளியான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு அடுத்த படத்திலேயே நேருக்கு நேர் படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும், விஜய்யுடன் பிரியமுடன் படத்திலும் நாயகியாக நடித்தார்.

இதையும் பாருங்க : ஒன்னும் மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோங்க – ரெட் கார்ட் நீக்கப்பட்ட பின் சிம்பு போட்ட ட்வீட் வைரல்.

Advertisement

பின்னர் அதே விஜய்யுடன் திருமலை படத்தில் ரகுவரன் மனைவியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்தாலும் கவர்ச்சியான வேடத்தில் நடித்தது கிடையாது. இப்படி ஒரு நிலையில் இவர் இளம் வயதில் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இவருக்கும் தற்போது 41 வயது ஆனாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக தான் இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இவருக்கு திருமணம் நடைபெற்றதாக வதந்திகள் வந்தது. ஆனால், அதெல்லாம் பொய் என்று கூறி இருந்தார் கௌசல்யா.

Advertisement
Advertisement