சுல்தான் படத்தில் வந்த கடா யார் தெரியுமா ? 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி பார்த்த இதில் இருந்து வந்தவர் தானாம்.

By Rajkumar · 11/4/2021

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'ரெமோ' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன். தற்போது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து இவரது இயக்கத்தில் 'சுல்தான்' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு, சதீஷ், KGF கருடன் புகழ் ராமச்சந்திர ராஜு போன்றவர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு சத்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், விவேக் - மெர்லின் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கும் BGM மட்டும் யுவன் போட்டுள்ளார்

https://twitter.com/giantzanjeerwwe/status/1380709856324239360

அடாவடி செய்து வரும் ரௌடிகளை வைத்து விவசாயத்தை செய்ய விடாமல் தடுக்கும் கார்பெர்ட்களை ஒழித்து, ரவுடிகளை எப்படி நல்லவர்களாக மாற்றுகிறார் சுல்தான் என்பது தான் படத்தின் ஒன்லைன். படத்தில் கார்த்தியின் அப்பாவாக வரும் நெப்போலியன் ஒரு மாபெரும் ரௌடி கூட்டத்தின் தலைவராக இருக்கிறார். அவருக்கு கீழ் பல விசுவாசமான அடியாட்கள் இருக்கிறார்கள். இவரின் மகனாக வரும் கார்த்தி சிறு வயதிலேயே அம்மாவை இழந்து இந்த ரௌடி கூட்டத்திற்கு இடையில் தான் வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் நெப்போலியன் இறந்து விட பின் இந்த ரௌடி கேங் சுல்தானாகிய கார்த்தி கையில் வருகிறது.

இதையும் பாருங்க : தனது ரசிகரின் குழந்தைக்கு விஜய் சேதுபதி என்ன பெயர் வைத்தார் தெரியுமா ? (ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தின் பெயராச்சே)

ஆனால், அவர்களை ஒரு அடியாட்கள் போல பயன்படுத்திகொள்ளாமல், அவர்களை நல் வழிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தைஉயர்த்த நினைக்கிறார் கார்த்தி. நெப்போலியன் இறக்கும் முன்னர் ஒரு கிராமத்தில் விவசாயம் செய்ய விடமால் அந்த கிராமத்தை கார்ப்ரேட் நிறுவனம் பிடியில் ஒப்படைக்க வில்லன் ஒரு கிராமத்தில் உள்ளவர்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகிறார். அவர்களின் கிராமத்தை நெப்போலியன் காப்பற்றி தருவதாக சத்தியம் செய்கிறார். இப்படி ஒரு நிலையில் நெப்போலியன் இறந்துவிட நெப்போலியன் செய்து கொடுத்த சத்தியத்தின்படி அந்த கிராமத்தை சுல்தான் காப்பாற்றினாரா ? தன்னை எடுத்த வளர்த்த ரௌடி கும்பலை வன்முறையில் ஈடுபடாமல் எப்படி தடுக்கிறார்.

அவர்களை எதிர்க்க தன்னுடைய முரட்டு தனமான கேங்கை பயன்டுத்துகிறார் கார்த்தி. இறுதியில் என்ன ஆனது ? விவசாயத்தை ரௌடிகளை வைத்து கார்த்தி காப்பற்றினாரா ? என்பது தான் கதை. இந்த படத்தில் கார்த்தியின் பாதுகாவலராக பீமனை போல ஒரு பிரம்மாண்ட நபர் நடித்து இருப்பார். அவருடய உண்மையான பெயர் ஜன்சீர். இவர் 90ஸ் ஸ் கிட்ஸ்கள் விரும்பி பார்க்கும் Wwe வீரராம்.

behindtalkies AMP · Quick view
View full