திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்து நடிகர் நரேனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நரேன். இவர் மிஸ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாக இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை, கைதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், இவர் தமிழ் மொழி படங்களில் மட்டும் இல்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களும் மிரட்டி இருக்கிறார்.
கடைசியாக இவர் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் படத்தை இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

Advertisement

விக்ரம் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டை குவித்து இருக்கிறது. விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

நரேன் திரைப்பயணம்:

மேலும், படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார். அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் நரேன். இதனை அடுத்து லோகேஷ் இயக்க இருக்கும் படத்தில் நரேன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் நரேனிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

நரேன் குடும்பம்:

நடிகர் நரேன் அவர்கள் 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளனியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு தன்மியா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 14 வயது ஆகிறது. சமீபத்தில் கூட நரேன் தன்னுடைய 15 வது திருமண நாளை கொண்டாடி இருந்தார். பின் நரேன் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

நரேனுக்கு பிறந்த குழந்தை:

திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்து நரேன் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். நேற்று நரேன் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை நரேன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே நரேனிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement