நேற்று மாலை ஏ.சி.எஸ் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி முதலில் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசினார். பின்னர் ‘தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் உலக அளவில் வளர வேண்டும், அப்போது தான் தமிழின் சிறப்பு உலகிற்கு தெரியும்’ என்று மறைமுகமா சீமானை தாக்கி பேசினார்.

Advertisement

மேலும் பேசுகையில் தமிழகத்தில் தற்போது நல்ல தலைவனுக்கு வெற்றிடம் ஏற்படுத்தியுள்ளது என்றார்.நேற்றைய ரஜினியின் மேடைப்பேச்சு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் பலரும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினியின் மேடைப்பேச்சு ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் பொதுமக்களிடையேயும் பலத்த வரவேற்பை தந்துள்ளது எனலாம்.

Advertisement
Advertisement