நடிகர் ஸ்ரீகாந்த், 2002 தமிழில் வெளியான “ரோஜா” கூட்டம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சொல்லப்போனால் மாதவனுக்கு பின்னர் தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர்.

Advertisement

ரோஜா கூட்டம் படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். தமிழில் சாக்லேட் பாய் என்ற பெயரை எடுத்ததால் அந்த பெயரை மாற்ற பல வித்தியாசமான கதை களத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடியது இல்லை.

இதையும் படியுங்க : ரஜினி மற்றும் தல குறித்து பதிவிட்ட கார்த்திக் சுப்புராஜ்.! வறுத்தெடுத்து வரும் அஜித் ரசிகர்கள்.! 

நடிகை ஸ்னேஹாவுடன் பல ஆண்டுகள் காதல் கிசுகிசுக்களில் விழுந்து வந்த ஸ்ரீகாந்த், பின்னர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற தெலுகு குடும்பத்தை சார்ந்த வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர்.

Advertisement

Advertisement

இவரது மகன் மற்றும் மகளை அவ்வளவாக வெளியுலகிற்கு காட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தின் மகன் மற்றும் மகளின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் இருவரும் மிகப்பெரிய பிள்ளைகளாக இருக்கின்றனர்.

Advertisement