குழைந்தைகள் தின விழாவில், வையாபுரிடம் குழந்தைகள் கேட்ட கேள்வி- நெகிழும் வையாபுரி !

By Ajju · 14/11/2017
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் வையாபுரிக்கு தற்போது வரவேற்புகள் சற்று அதிகம் தான். அவர் எங்கு சென்றாலும் பிக் பாஸ் வையாபுரி என்று தான் அழைக்கிறார்கள். குழந்தைகள் தினமான இன்று பள்ளிக்குழந்தைகளுடன் தினத்தை கொண்டாடியுள்ளா வையாபுரி. திருவாரூரின் நியூ பாரத் பள்ளியின் 25ஆவது ஆண்டு தினத்தில் கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தையும் சிறப்பித்தார். கலந்து கொண்ட வையாபுரியிடம், பிக் பாஸில் அவர் பேசிய வசனங்களை எல்லாம் பேசச் சொல்லி மகிழ்ச்சியடைந்தனர் குழந்தைகள். புகைப்படங்கள் கீழே: எங்கு போனாலும், 'ஜெமினி' படத்தில் அவர் கமெடியாக பேசிய 'ஏக் மார் தோக் துக்கடா' வசனத்தை தான் பேசச் சொல்வார்கள், ஆனால் பிக் பாஸிற்குப் பிறகு பிக் பாஸில் பேசிய வசனங்களை பேசச் சொல்கின்றனர் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் வையாபுரி. பிக் பாஸுக்கு பிறகு எல்.கே.ஜி குழந்தைகள் கூட என்னைப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்கின்றனர் என மகிழ்ச்சியடைந்தார் வையாபுரி.
Tamil Behind Talkies AMP · Quick view
View full