திருவாரூரின் நியூ பாரத் பள்ளியின் 25ஆவது ஆண்டு தினத்தில் கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தையும் சிறப்பித்தார். கலந்து கொண்ட வையாபுரியிடம், பிக் பாஸில் அவர் பேசிய வசனங்களை எல்லாம் பேசச் சொல்லி மகிழ்ச்சியடைந்தனர் குழந்தைகள்.
புகைப்படங்கள் கீழே:
எங்கு போனாலும், 'ஜெமினி' படத்தில் அவர் கமெடியாக பேசிய 'ஏக் மார் தோக் துக்கடா' வசனத்தை தான் பேசச் சொல்வார்கள், ஆனால் பிக் பாஸிற்குப் பிறகு பிக் பாஸில் பேசிய வசனங்களை பேசச் சொல்கின்றனர் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் வையாபுரி. பிக் பாஸுக்கு பிறகு எல்.கே.ஜி குழந்தைகள் கூட என்னைப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்கின்றனர் என மகிழ்ச்சியடைந்தார் வையாபுரி.




