தென்னிந்திய சினிமா துறை உலகில் 80 மற்றும் 90களில் புகழ்பெற்ற ஹீரோயினியாக கலக்கி வந்தவர் தான் நடிகை அம்பிகா. இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி ஸ்டார்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.அம்பிகா அவர்கள் மலையாள சினிமா உலகில் முதன் முறையாக குழந்தை நட்சத்திரமாக 1978 ஆம் ஆண்டு ‘சமயமாயில்லா போலும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திலேயே அதிக அளவு மக்களிடையே பேசப்பட்டு வந்தார். பின்னர் 1979 ஆம் ஆண்டு ‘சக்காளத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அது மட்டும் இல்லைங்க இவரது தங்கை கூட சிறந்தநடிகை தான்.அது வேற யாரும் இல்ல நடிகை ராதா. ஆனால்,ராதா நடிப்பில் அக்காவோட சூப்பர் என்று கூட சொல்லலாம்.மேலும், நடிகை அம்பிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பட்டையை கிளப்பினார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை அம்பிகா 1980 கலிருந்து 1990 வரை அதாவது பத்து வருடங்களாக சினிமா துறையில் நம்பர்-1 நடிகையாக சிறந்து விளங்கினார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்குப் பிறகு படத்தில் முக்கிய கதாபாத்திரம், சீரியல், நிகழ்ச்சிகள் என மாறிவிட்டார்.அம்பிகா அவர்களுக்கு ராம் கேசவ், ரிஷிகேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதையும் பாருங்க : முகெனிடம் கேட்ட கேள்வியை டெலீட் செஞ்சிட்டாங்க.! கடைசில பத்திரிகையாளரே ஏமாத்திடீங்களே.!

Advertisement

இதில் மூத்த மகன் ராம் கேசவ் அவர்கள் சினிமா திரையில் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்று அம்பிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், அந்த படம் குறித்து அவர் தமிழ் அல்லது மலையாள படத்தில் என் மகன் கதாநாயகனாக விரைவில் நடிப்பார் என்று உறுதியாகக் கூறினார் சினிமா துறையில் அறிமுகப்படுத்த போவதாக கூறினார் மேலும், சினிமா துறையில் சிறப்பான முறையில் அவனை நடிகனாக அறிமுகப்படுத்துகிறேன் என்றும் கூறினார்.இதனைத்தொடர்ந்து சினிமா துறையில் நடிகர், கதாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்த லிவிங்ஸ்டன் மகளும் அம்பிகாவின் மூத்த மகனும் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள் என தெரியவந்தது.ஆமாங்க ’கலாசல்’ என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் என்ற தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இவர்களுடன் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், அபிஷேக் ,பானுசந்தர், சாய்பிரியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. இந்த படத்திற்கு நிஜாமுதீன் இசை அமைக்கிறார் என்றும் பாபு குமார் ஒளிப்பதிவு செய்கிறார் என்றும் தெரிவித்தார்கள். கோபிகிருஷ்ணா எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் அஸ்வின் மாதவன் இயக்குகிறார் என வெளிவந்தது. இவர் ஏற்கனவே சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். மேலும், படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது என சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த படத்தின் கதை கார்ப்பரேட் முதலாளிகள் அப்பாவி மக்கள் மீது எப்படி எல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரம் ஆக்குகிறார்கள் என்பதுதான் என்று கூறியிருந்தார்கள். கூடிய விரைவில் அம்பிகா மகனும், லிவிங்ஸ்டன் மகளின் நடிப்பில் ’கலாசல்’ படம் வெளியேவர உள்ளது என தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement
Advertisement