முகெனிடம் கேட்ட கேள்வியை டெலீட் செஞ்சிட்டாங்க.! கடைசில பத்திரிகையாளரே ஏமாத்திடீங்களே.!

0
9516
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.

- Advertisement -

இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.

-விளம்பரம்-

அதே போல இறுதி வாரத்திலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த 4 போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டிற்குள் 8 பத்திரிகையாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களை சில கேள்விகளை கேட்டிருந்தனர். ஆனால், அதில் ஒரு சில கேள்விகளை மட்டும் தான் ஒளிபரப்பியதாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சுபா கீர்த்தனா கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய அவர், பிக் பாஸ் தான் அங்கேய அனைத்தையும் முடிவு செய்கிறது. எந்த டாஸ்கில் யாரை விட்டால் அங்கே கண்டன்ட் கிடைக்கும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். மேலும் , ஒருவரை எப்படி காட்ட வேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாக தெரியும். அதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் ஸ்க்ரிப்ட் என்று நான் சொல்லவில்லை. இருப்பினும் எதை ஒளிபரப்ப வேண்டும் என்று பிக் பாஸ் தான் முடிவு செய்கிறார்.

மேலும், நான் உள்ளே சென்ற போது சாண்டி, ஷெரின், முகென் ஆகிய மூன்று பேர்களிடம் தான் கேள்வியை கேட்டேன். ஆனால், அவர்கள் நான் சாண்டியிடம் கேட்ட கேள்வியை மட்டும் தான் ஒளிபரப்பினார்கள். நான் முகெனிடம், நீங்கள் இறுதி போட்டிக்கு வரை வருவீர்கள் என்று நினைத்தீர்களா என்று கேள்வி கேட்டேன். கண்டிப்பாக இல்லை என்று கூறினார்.

மேலும், அவர் வாழ்வில் கடந்து வந்த பாதை, இசை மற்றும் நடிப்பில் அவருக்கு இருக்கும் ஆர்வம் பற்றியெல்லாம் சொன்னார். உண்மையில் அவர் பாடிய கிறுக்கி பாடலுக்கு வெளியில் எத்தனை ரசிகர்கள் இருக்கிறார் என்பதை அவர் தெரியாமல் இருக்கிறார். அவர் மிகவும் உண்மையாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும்,ஷெரினிடம் கேட்ட கேள்வி குறித்து கூறியுள்ள அவர், நான் ஷெரினிடம், நீங்கள் எப்படி அணைத்து சூழ் நிலையிலும் மிகவும் ஜாலியாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், இது தான் என் இயல்பு என்று கூறியிருந்தார் . ஷெரின் மிகவும் நல்ல உள்ளம் கொண்ட நபர் , நான் உள்ளே சென்ற போது என்னை கட்டி அணைத்து வரவேற்றார். அவர் அழுதாள் கூட அழகு தான் என்று கூறியுள்ளார் கீர்த்தனா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement