சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்த சில நடிகைகள் தற்போது ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா.டெல்லியை சேர்ந்த இவர் முதன் முதலில் ‘யுவகுடு’ என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பத்ரி திரைப்படத்திற்கு பின்னர் ரோஜாக்கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இறுதியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுகு மற்றும் ஹிந்தி சினிமாவில் என்னேற்ற படங்களில் நடித்திருகிறார். 2007 ஆம் ஆண்டு தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்து கொண்டனர்.ஆனால் திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

இதையும் பாருங்க : 5 வருஷமா அதிமுக ஆட்சின்னு சும்மா இருந்தீங்கள – தனது தோழி பிரச்சனை குறித்து கேள்விக்கு ஷாலு சம்மு பதில்.

Advertisement

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 இல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நினைவு படுத்தப்பட்டார் . அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான ‘களவாடிய பொழுதுகள்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் பூமிகா. இத்தனை ஆண்டுகள் கழித்து பூமிக்கவின் ரீ என்ட்ரி யை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று ஆச்சர்யபட்டனர்.

எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம், அந்த வகையில் சமீப காலமாக பூமிகா நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துகொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கிறார் பூமிகா என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Advertisement
Advertisement