தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான்.

அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : அந்நியன் பட ஆன்டி லுக்க காப்பி அடித்த சூப்பர் மாடல் – ஆதாரத்துடன் ட்விட்டருக்கு வந்த ஜோ மைக்கேல்.

Advertisement

இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வின்னர் படத்தில் பிகினி உடை அணிந்தது குறித்து விளமளித்திருந்த கிரண், படப்பிடிப்பின் போது என் எடை குறித்து தான் மிகவும் பயமாக இருந்தது. ஆனால், பாடலும் படமும் வெற்றி பெற்றது.

மேலும் பல ரசிகர்கள் இதுபோன்ற காட்சிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டேன் என்று எனக்குத் தெரியும்.ஆனால் எல்லாம் நன்றாக முடிவடையும் போது. உண்மையில் இதை இன்னும் சரியான சம்மர் உடலுடன் செய்வேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் படு கிளாமரான ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் முன்பை விட சற்று உடல் எடையை குறைத்திருக்கிறார் கிரண். எனவே, அவர் சொன்னது போலவே விரைவில் மீண்டும் பிகினி தரிசனம் அளித்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

Advertisement
Advertisement