இந்து மத போதனைகளை போதிப்பதாக கூறி பல்வேறு பாலியல் புகார்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதாவுடனான படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்ப்பட்டது. ரஞ்சிதா அர்ஜுன் நடித்த ‘ஜெய்கிந்த்’ படத்தின் மூலம் பிரபலமான தமிழ் நடிகை ஆவார். பின்னர் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. ஆனால், சாமியார் நித்யானந்தா, தான் சட்ட ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். தற்போது வரை அந்த வழக்குகள் நிழுவையில் உள்ளது.

Advertisement

இதையும் படிங்க : வெண்ணிறாடை மூர்த்தி பற்றி அறியாத விஷயமும்… அவரின் தற்போதையை நிலையும்!

Advertisement

தற்போது மீண்டும் ஒரு நடிகை சாமியார் நித்யாந்தாவின் ஆசிரமத்தின் குடிகொண்டுள்ளார். 1996ல் முரளி நடித்து வெளிவந்த படம் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ அந்த படத்தில் முரளி ஜோடியாக நடித்தவர் நடிகை கௌசல்யா. அவர், விஜய், அஜித் என பல நடிகர்களுக்கு ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தற்போது நித்யானந்தாவின் ஆசிரமத்தில் குடிகொண்டுள்ளார்.

Advertisement

பல காலமாக தீராத முதுகு வழியால் அவதிப்பட்டு வந்த கௌசல்யா, பல்வேறு மருத்துவமனைகளில் செய்த மருத்துவங்களால் பலிக்கவில்லை. பின்னர், நண்பர்கள் சில கூறியதன் பேரில் நிதயானந்தாவின் பிடதி ஆசிரமம் சென்று சில பயிற்சி எடுத்துள்ளார். அங்கு எடுத்த பயிற்சியின் மூலம் முதுகுவலி சரியாக, தற்போது பிடதி ஆசிரமத்திலேயே இருக்கிறார் என கூறப்படுகிறது.

Advertisement