இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். அதன் பின்னர் மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்க்கு நாயகியானார்.

இதையும் பாருங்க : இத்தனை கோடி கொடுத்து படத்தை வாங்க முன் வந்த OTT நிறுவனம் – விஜய் தேவர்கொண்டாவின் ஓவர் காண்பிடண்ஸ் பதிவு.

Advertisement

பேட்ட படத்தை விட மாஸ்டர் படம் வெளியான பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ரசிகர்கள் பலரும் வரை செல்லமாக மாலுமா என்று தான் அழைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தனுஷ் தன்னை எப்படி அழைப்பார் என்று சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசில் கூறியுள்ளார் மாளவிகா. தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று தான் அழைப்பார் என்றும் தனக்கு நெருக்கமானவர்கள் தன்னை ’மாலு’ என்றே அழைப்பார்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது மாளவிகா மோகனன், தனுஷின் 43 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும், ஜி பி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த படத்தை துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement