போலி சாமியார் நித்தியானந்தா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இந்து மத போதனைகளை போதிப்பதாக கூறி இந்து பாலியல் புகார்களில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் இவருடைய ஆசிரமங்கள் உள்ளன. உலக அளவில் இவருக்கு பக்தர்கள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து வருகின்றன.

குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து வருகின்றன. மேலும், மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க நித்தியானந்தா என்றாலே நமக்கு நினைவில் வருவது நடிகை ரஞ்சிதா தான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதாவுடனான நித்யானந்தா படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : அன்றே கணித்த சூர்யா – சிங்கம் 2 படத்தில் வந்தது போல தூத்துக்குடியில் நடைபெற்றுள்ள சம்பவம்.

Advertisement

இது அனைவருக்கும் தெரிந்ததே.தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. ஜெய்ஹிந்த் படத்தில் அர்ஜுடன் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ரஞ்சிதா. இதன் பின் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ரஞ்சிதா. தற்போது ரஞ்சிதா சாமியார் ஆகிவிட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போலி சாமியார் நித்தியானந்தா உடன் ரஞ்சிதா இருந்த படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார் ரஞ்சிதா.

இந்த வீடியோ மூலம் சினிமாவில் அவர் வாங்கி வைத்த மொத்த பெயர், புகழ் எல்லாமே டேமேஜ் ஆனது. அதன் பின்னர் வேறு வழியின்றி அந்த ஆசிரமர்த்திலேயே செட்டில் ஆனார். ரஞ்சிதா ஆரம்ப காலத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்குவார் அம்மணி. தெலுங்கில், தாத்தா மனவாடு என்ற படத்தில் முதன் முறையாக நீச்சல் உடையிலும் நடித்து இருக்கிறார்.

Advertisement
Advertisement