நடிகையிடம் சில்மிஷம் ! நடிகரின் கன்னத்தில் அறைவிட்ட ரஜினி பட நடிகை ! புகைப்படம் உள்ளே
கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா அப்டே.தமிழில் கார்த்திக்குடன் ஆள் இன் ஆள் அழகுராஜா என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்த இவர், தற்போது தெலுகு, ஹிந்தி,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.பொதுவாக மேடை நேர்காணல்களிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி ராதிகா அப்டே எல்லாரிடமும் சற்று தைரியமாகவும் ,வெளிப்படையாகவும் பேசுவார்.படங்களில் பல நிர்வான காட்சிகளில் நடித்த இவர் அதனை பற்றி கேள்வி எழுப்பினால் கூட மூக்குடைப்பது போன்ற பதில்களை அளிப்பார்.
சமீபத்தில் கலர்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியில் நேஹா துப்பியா நடத்தும் டாக் ஷோ ஒன்றில் பங்கேற்ற ராதிகா அப்டே, தான் நடித்த தமிழ் படத்தில் நடித்த நடிகர் ஒருவரை அறைந்துவிட்டதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதுவரை கபாலி உட்பட 4 தமிழ் படங்களில் நடித்துள்ள ராதிகா அப்டே .ஒரு தமிழ் பட ஷூட்டிங்கின்போது தமிழ் நடிகர் ஒருவர் தனது அருகில் வந்து நின்றதாகவும் ,ஆனால் அதற்கு முன்னால் நான் அவரை பார்த்ததே இல்லை எனவும் பின்னர் அருகில் வந்து நின்ற அவர் தனது காலை சுரன்டியதால் அத்திரமடடைந்த ராதிகா அப்டே அவரை கன்னத்தில் பளார் என்று அறைந்ததாக ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார்.
ஆனால் அந்த நடிகர் யார் ,எந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இந்த சம்பவம் நடந்தது என்று அவர் கூறவில்லை. ஆனால் ராதிகா அப்டே அந்த சம்பவத்திற்கு முன்னாள் அவரை கண்டதே இல்லை என்று கூறியிருப்பதால் அவர் பிரபலமான நடிகராக இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணம் தோன்றுகிறது.