தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனவர். அதன்பின்னர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என்று பல்வேரு நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு, தெலுங்கு மலையாளம் கன்னடம், தெலுங்கு என்று பல மொழி படங்களில் நடித்த ரோஜா, இளம் வயதில் படு கிளாமராகவும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இத்தனை ஆண்டுகளில் ARஐ மீசையோடு பார்த்திருக்கீங்களா ? முதல் முறையாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.

Advertisement

தமிழில் இவர் அறிமுகமான முதல் படமான செம்பருத்தி ‘ படத்திலேயே பிரசாந்துடன் லிப் லாக் காட்சியில் நடித்தார் ரோஜா. ஆனால், பிரசாந்த் அந்த காட்சியில் லிப் லாக் கொடுப்பார் என்று ரோஜாவிடம் தெரிவிக்கப்படாததால் அந்த காட்சி முடிந்ததும் செம ரகளையில் ஈடுபட்டார் ரோஜா. இப்படி ஓர் நிலையில் கவர்ச்சிக்கு எந்த தடையும் போடாமல் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த இவர் பிகினி உடையிலும் நடிக்க தவறவில்லை.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். நடிகை ரோஜா அவர்கள் தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

Advertisement
Advertisement