பிரேமம் படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்த்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி மகன் துல்கர். நடித்த களி படத்தில் நடித்தார். அந்த படமும் வசூல் சாதனை புரிந்தது.இந்த இருப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆர்மபித்தார் 2017 இல் அவர் நடித்த பிடா படம் மாபெரும் வெற்றியடைந்தது இதனால் அவருக்கு அங்கும் மார்க்கெட் கூடிவிட்டது.

Advertisement

பிரேமம் படத்தில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்திற்கே 50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.பல அறிமுக நாயகிகள் தனது முதல் படத்திற்கு 15 முதல் 20 லட்சம் சம்பளம் மட்டுமே வாங்குவார்கள்.ஆனால் தற்போது இதைவிட அதிர்ச்சியாக சாய் பல்லவி தனது சம்பளத்தை மலை போல் உயர்த்தியுள்ளர்.தெலுகு நடிகர் சர்வானந்துடன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் சாய் பல்லவி அந்த படத்தில் நடிக்க ரூ. 1.5 கோடி சாய் சம்பளம் வாங்கியிருப்பதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது. 

வெறும் 2 3 படங்களில் நடித்த சாய் பல்லவிக்கு பல முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்த அனைத்து கோலிவுட் நடிகைகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.உண்மையில் சாய் பல்லவி இவ்வளவு சம்பளம் வாங்குகின்றாரா என்று அவர் சொன்னால் தான் தெரியும்.

Advertisement
Advertisement