தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் நடித்த ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ ,’மஜிலி’போன்ற படங்களும் அம்மணிக்கு தோல்விப் படங்களாகவே அமைந்திருந்தது. மேலும், திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார்.

Advertisement

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த மஜிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவிற்கு வசூலையும் பெற்றது. அதே போல இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ் தெலுங்கு என்று நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் இன்னும் வாய்ப்பு வரவில்லை.

இதையும் பாருங்க : கழட்டி விட்ட ஜீ தமிழ், மீண்டும் வாய்ப்பு கொடுத்த சன் டிவி. அதுவும் இப்படி ஒரு மாபெரும் தொடரில்.

Advertisement

சமீபத்தில் நடிகை சமந்தாவிற்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்த நடிகை என்ற சினிமா சென்ட்ரல் எக்ஸலண்ட் விருதும், ஓ பேபி மற்றும் மஜ்லி திரைப்படத்திற்காக சினிமா தெலுகு விருதும் கிடைத்தது சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றிற்க்கு சென்றிருந்த சமந்தா உள்ளே அணிந்திருக்கும் ஆடை தெரியும் வகையில் மிகவும் மெல்லிய ஆடையில் வந்திருந்தார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

நடிகை சமந்தா தற்போது 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. ஆனால், 96 படத்தில் நடித்த திரிஷாவை போன்று சமந்தா இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்கவில்லை என்றும், சமந்தாவின் நடிப்பு திரிஷாவின் நடிப்பைக் எடுப்பது போல் இருக்கிறது என்றும் பலரும் விமர்சித்தார்கள். ஆனால், இதற்கு பதிலடி கொடுத்த சமந்தா நான் இந்த படத்தில் த்ரிஷாவை காப்பியடித்து நடிக்க வேண்டும் என்று எண்ணவில்லை இந்த படத்தினை அனைவருக்கும் கொண்டு செல்ல விரும்பியதால் இந்த படத்தில் நடித்தேன் என்று கூறி இருந்தார் சமந்தா.

Advertisement