சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார்.

இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார்.

இதையும் பாருங்க :பீர் பாட்டிலால் மாடல் அழகியை தாக்கிய விவகாரம் – புதிய சிக்கலில் நிக்கி கல்ராணி சகோதரி (இப்போ தான் கஞ்சா கேஸ்ல ஜாமின்ல வந்தாங்க)

Advertisement

சமீபத்தில் பேசிய ஷகீலா, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்.என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறி இருந்தார்.

கேரள படங்களில் நடித்தாலும் நடிகை ஷகீலா பல ஆண்டுகளாக சென்னையில் தான் வசித்து வருகிறார். அதுவும் மிகவும் சின்ன வீட்டில் ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையாக வாழந்து வருகிறார். அவரது அப்பா அந்த வீட்டில் வாழ்ந்ததாகவும், தனது அப்பா அந்த ஏரியாவில் தாதாவாக இருந்ததால் இங்கே எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் இங்கேயே தங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஷகீலாவின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். அதில் இரண்டாம் மனைவியின் மகள் தான் ஷகீலா.

Advertisement
Advertisement