இந்திய திரையுலகின் பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாக நேற்று செய்தி வெளியானது.பிரபல நடிகர்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தை பதிவுசெய்து வருகின்றனர்.சிலர் ஸ்ரீதேவியின் உயிரிழப்பிற்கு காரணம் அவர் உடல் அழகை மெருகேற்றி கொள்வதற்காக செய்யப்பட்ட சர்ஜரிகளே காரணம் என்றும் விமர்சித்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது துபாய் மருத்துவமனை அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.மேலும் அவர் உயிரிழந்த போது அவரது ஆல்கஹால் கலந்திருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் குளியலறையில் உள்ள தொட்டியில் தவிறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றுமுதல் மாரடைப்பால் தான் இறந்தார் என்று தகவல் பரவிய நிலையில் தற்போது அவர் ஆக்சிடெண்ட்டலாக உயிரிழந்துள்ளார் என்ற மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளதால் எது நிஜம் எது பொய் என தெரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர்.

Advertisement
Advertisement