விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி ‘ சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஆல்யா மானஸா. சீரியலில் நடிப்பதற்கு முன்பாக நடன கலைஞராகவும் இருந்துள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது மானஸ் என்பவரையுடன் காதல் கொண்டார். தற்போது அவருடனான காதலை முறித்துக்கொண்டு சஞ்சீவை காதலித்து வருகிறார்.

இதையும் படியுங்க : மானஸாவின் முன்னாள் காதலருக்கு நிச்சயதார்தம் முடிந்தது..!

Advertisement

மானஸை பிரிந்த சில மாதத்திலேயே சஞ்சீவை காதலித்து வருவதால் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். அதிலும் தற்போது அம்மணி பல பேட்டிகளில் பங்குபெற்று வருகிறார்.

தற்போது அம்மணி கடை திறப்பு விழா, விளம்பரங்கள் என்று படு பியூ ஆகிவிட்டாராம். இதனால் அவரை பலரும் தொடர்பு கொள்ளமுடியாமல் போய்விடுகிறதாம். அதனால் எதுவாக இருந்தாலும் தனது மேனேஜரிடம் பேசும்படி அவரது நம்பரையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement