இரண்டாவது குழந்தைக்கு தாயானார் சமீரா ரெட்டி.! வைரலாகும் குழந்தையின் புகைப்படம்.!

By Rajkumar · 12/7/2019

பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார். 

https://www.instagram.com/p/BzxVzeiHX68/

1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி அஜித் நடித்த சிடிஸின் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பலபடங்களில் நடித்து வந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் அமலா பாலுடன் போஸ் கொடுத்த ரம்யா.! இவங்களையும் கெடுத்துட்டாங்களா.! 

பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

https://www.instagram.com/p/BzzyjWZH1uJ/?utm_source=ig_embed

தனது 34 வது திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். மேலும், சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கற்பமாக இருந்தார். இந்த நிலையில் இன்று (ஜூலை 12) இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full