தென்னிந்திய சினிமா திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்.நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சினிமா திரையுலகில் தனக்கென ஒரு பாதையை அமைத்து கொண்டார்.அதுமட்டுமில்லாமல் சினிமா துறை உலகில் வெளிவந்த அனைத்து தமிழ் படங்களும் பெரிய மாஸ் ஹிட் கொடுத்த படமாகும். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.சினிமா துறைக்கு வருவதற்கு முன் இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட் ஆகும். ஆனால், திரையுலகில் இவரை “ரஜினிகாந்த்” என்று தான் அழைப்பார்கள்.சினிமாவில் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். பின்னர் ஏராளமான படங்களில் தன்னுடைய திறமையால் மக்களிடையே அதிக ஆதரவையும் அன்பையும் பெற்றார். பின்னர் அவருடைய ரசிகர்கள் இவரை “தலைவர்” என்றும் “சூப்பர் ஸ்டார்” என்றும் தான் அழைப்பார்கள்.

மேலும், இவருடைய நடிப்பு திறனுக்கு இந்திய அரசு ‘பத்மபூஷன், பத்மவிபூஷன்’ என்ற பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்தியது. இந்திய சர்வதேச திரைப்பட விருது கூட வாங்கி உள்ளார்.ரஜினி அவர்கள் நடிப்பில் ஒரு புலி என்றே கூட சொல்லலாம். ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரில் உள்ள மைசூரில் பிறந்தவர். இவர் முதலில் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இவருடைய ஸ்டைல் , நடிப்பு திறமையையும் பார்த்து தான் பாலச்சந்திரன் அவர்கள் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.தற்போது சினிமா துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென்று அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் வெளிவந்ததை தொடர்ந்து நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் ரஜினியை அரசியலுக்கு வரா வேண்டும் என்று கூறிய நியூஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : இறுதி போட்டிக்கு யாரெல்லாம் வர போறாங்க தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்.!

Advertisement

தமிழில் ரஜினிகாந்த் எப்படியோ அதே மாதிரி தான் பாலிவுட்டில் ( ஹிந்தியில்) சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் அமிதாபச்சன். அவர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.சமீபத்தில் ஒரு பேட்டியில் அரசியலுக்கு எல்லாம் வர வேண்டாம் என ரஜினிகாந்துக்கு அட்வைஸ் அறிவுரை கூறி உள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.மேலும், ரஜினிகாந்த் அவர்கள் 2017ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார்.அவர் அப்போதிலிருந்தே கட்சிப் பணிகளை தீவிரமாக செய்து கொண்டுவருகிறார். மேலும், அவருடைய மக்கள் மன்றத்தினர் மூலம் பல்வேறு பொது நல திட்டங்களையும், உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார்.அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். மேலும்,அமிதாப் பச்சன் அந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவியை பார்த்து, நீங்கள் அரசியல் களத்திற்கு வரவேண்டாம் என கூறினார். ஆனால் சிரஞ்சீவி அவர்கூறிய வார்த்தையை கேட்கவில்லை. சிரஞ்சீவிக்கு கூறிய அறிவுரையை தான் தற்போது ரஜினிகாந்துக்கு கூறி வருகிறார் அமிதாப் பச்சன். சிரஞ்சீவி ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். மேலும், அமிதாப் பச்சன் அவர்கள் சிரஞ்சீவிக்கும், ரஜினிகாந்த்துக்கும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று தீவிரமாக அறிவுறுத்தினார். ஆனால்,எப்படி சிரஞ்சீவி கேட்கவில்லையோ,அதே போல் தான் ரஜினிகாந்தும் கேட்க மாட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தான் என்று பலர் கோஷம் போட்டு கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே தலைவர் சூப்பர் ஸ்டார் தலைவராக வருவாரா? இல்லையா? என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement
Advertisement