தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

மேலும், நடிகை ஆண்ட்ரியாவிற்க்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதையும் பாருங்க : அட்ஜஸ்ட் செய்யும்படி என் அம்மாவிடம் கேட்டாங்க – சினிமாவிற்கு குட் பை சொன்ன ஷாக்கிங் காரணத்தை சொன்ன கல்யாணி

Advertisement

மேலும், வடசென்னை படத்தில் இவர் அமீருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது வடசென்னை படத்திற்கு பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் ஆண்ட்ரியா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அதே போல தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் செய்வது, யோகா செய்வது என்று இருந்து வருவார். அந்த வகையில்  தன்னுடைய உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் கால்களை உயர்த்தி பிடித்தபடி யோகா போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். எங்க உங்க பேன்ட் கிழிந்து இருக்கிறதோ என்று ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டேன் என்றும் பிறகு தான் டைல்ஸ் கல் என்று தெரிந்ததாகவும் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement