இயக்குனர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய இரண்டு படங்கள் அகிரா மற்றும் ஸ்பைடர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செல்லாததால் எப்படியாவது அடுத்த படத்தினை ஹிட் கொடுத்தாக வேண்டும் என முழுமூச்சாக வேளையில் இறங்கியுள்ளார் முருகதாஸ். இதனால் அடுத்த படம் தன்னுடைய ஆஸ்தான நடிகரான தளபதி விஜயை வைத்து இயக்கவுள்ளதாக தகல்வல்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற படங்களைப் போல ஒரு செம்ம படம் வரவுள்ளதாக தளபதி ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த படம் ஹாலிவுட்டில் வந்த ‘மில்லியன் டாலர் பேபி’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தினை லைகா நிறுவனம் ஒரு பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.
ஒரு வேளை இந்த படத்தினை இயக்க முருகதாஸ் சென்றுவிட்டால், சில டெக்னீசியன்களை தேர்வு செய்து வைத்திருக்கும் விஜய்-62 படம் தள்ளிப்போகுமோ என்ற கவலையில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.