பிக்பாஸ் கவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பிரச்சனையின் போது பேசுகையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் திருச்சியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தோம் அப்போது எங்களுக்கு நண்பர்கள் தான் உதவி செய்தார்கள்.
உறவினர்கள் யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை எனக்கென்று சில கடன்கள் உள்ளது. அதை அடக்கத்தான் நான் பிக்பாஸ் சிகிச்சைக்கு வந்தேன் இன்னும் ஒரு சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி விட்டால் அந்த கடனை அடைப்பதற்கான பணத்தை சம்பாதித்து விடுவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் கவினின் நண்பரும் அருவி பட நடிகருமான பிரதீப் அந்தோனி கவின் குறித்து பேசியுள்ளார்.
இதையும் பாருங்க : தர்ஷன் மற்றும் ஷெரின் உறவை கள்ளத் தொடர்பு என்று குறிப்பிட்ட வனிதா.! கடும் கோபமடைந்த ஷெரின்.!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள அவர் பேசுகையில், இந்த துறையில யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க, மத்தவங்ககிட்ட அவர் ரொம்ப நிதானமா, தயங்கித்தான் பேசுவாரு. ஏன்னா அவர் பொக்கிஷமா பாதுகாத்தது அவரோட பேருதான். இப்போ அது கெட்டுப்போனது தெரிஞ்சா அவருக்கு எந்த அளவுக்கு மனசு பாதிக்கும்னு தெரியல. ஒரு நல்ல நண்பனா அவர் கூட நான் இருப்பேன்.
இந்த பிரச்சனை குறித்து விஜய் விஜய் டிவி, கவினோடகுடும்பத்தாரிடம் கவினிடம் இந்த விஷயம் குறித்து சொல்லிடலாமா என்று கேட்டுள்ளனர். ஆனால், அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்படியே தெரிஞ்சாலும் கவினால் வெளியே வந்து அவுங்கள காப்பாத்தி முடிகிற விஷயம் கிடையாது. இத்தனை வருஷமா இந்தப் பிரச்சனைய பாக்குறாங்க. ஆனா கவினுக்கு இப்போதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. ‘எங்களால இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளிய வர வேண்டாம்’னுதான் அவங்க அம்மாவும் நினைக்கிறாங்க என்று கூறியுள்ளார் பிரதீப் ஆண்டனி.