விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறந்தார். பழனிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். இந்த உண்மையை பாக்யா கண்டுபிடித்து ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்.

Advertisement

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் வீட்டில் எல்லோருக்கும் இந்த உண்மை தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டுகிறார்கள். மேலும், கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விடுகிறார். தற்போது சீரியலில் ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலவரங்கள் சென்று கொண்டிருக்கின்றது. ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. ராதிகா வீட்டிற்கு சென்றவுடன் ஈஸ்வரி தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார்.

சீரியல் கதை:

ஈஸ்வரி வேணும் என்றே ராதிகா, அவருடைய அம்மாவை வம்பிழுப்பது கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று எபிசோடில் ஈஸ்வரி சரியாக சாப்பிடாமல் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் கோபி, ராதிகாமீது பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப் பின் தன்னுடைய அம்மாவை கோபியே நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறார். வேலை பார்ப்பது, தன்னுடைய அம்மாவை கவனிப்பது என்று பம்பரம் போல கோபி சுத்திக் கொண்டிருக்கிறார்.

Advertisement

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து ராதிகாவிற்கு கோபம் கோபமாக வருகிறது. இன்னொரு பக்கம் பாக்கியா ரெஸ்டாரன்ட் பக்கத்திலேயே பழனிசாமி கடை ஒன்று திறந்து இருக்கிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோவில், வீட்டில் இனியாவுக்கு பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இந்த பிறந்தநாள் விழாவிற்கு பழனிசாமியின் அக்கா மற்றும் அம்மா வருகிறார்கள். அப்போது அவர்கள் பழம் எதுவும் வாங்கவில்லையே என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

சீரியல் ப்ரோமோ:

இதனை கேட்ட கோபி எதற்கு என்று கேட்கிறார். பாக்கியாவை பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தான் என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி பாக்கியாவிடம் கோபப்பட்டு பேசுகிறார். இனிவரும் நாட்களில் பழனிசாமியின் காதலை பாக்கியா ஏற்றுக் கொள்வாரா? பழனிச்சாமி-பாக்கியா திருமணம் நடக்குமா? பாக்கியா குடும்பம் பழனிச்சாமியை ஏற்றுக்கொள்வார்களா? கோபி என்ன செய்யப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement