அன்று பிக் பாஸால் பட்ட அவமானத்தை மறந்து மீண்டும் விஜய் டிவிக்கு வந்த போட்டியாளர். யார் தெரியுமா?

0
143
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பட்ட அவமானத்தை மறந்து மீண்டும் விஜய் டிவி சீரியலுக்கு கமிட் ஆகியிருக்கும் போட்டியாளரின் செய்திதான் இணையத்தில் பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்களை கடந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார் ‌ இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை, சச்சரவு, கலவரம் தான்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி ஆரம்பத்தில் போட்டியாளர்கள் அன்பு மழை பொழிந்தாலும், இரண்டே நாட்களில் அடிதடியில் இறங்கி விடுவார்கள். அப்படித்தான் கடந்த கடைசி ஏழாவது சீசனிலும் ஒவ்வொரு நாளும் ரணகளமாக இருந்தது. குறிப்பாக முதல் சீசனில் ஓவியா தற்கொலை முயற்சி, இரண்டாவது சீசனில் பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியது, மூன்றாவது சீசரில் கவின் லாஸ்லியா காதல் என நிறைய விஷயங்கள் நடந்தது. அந்த சீசன்கள் முடிந்த பிறகு இவர்கள் சாதாரணமாக பேசிக் கொள்வதை பார்க்கும் போது, அட நிகழ்ச்சியை பார்த்த நாம் முட்டாளா என்று பலருக்கு தோன்றும். அப்படி ஒரு விஷயம் தான் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியிலும் நடந்தது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

அதாவது பிக் பாஸ் சீசன் 7ல் பிரதீப் ஆண்டனியை ‘ரெட் கார்’ட் கொடுத்து வெளியேற்றி, அவருக்காக குரல் கொடுக்கும் பெண்ணாக அர்ச்சனாவை விஜய் டிவி உள்ளே இறக்கியது. பூர்ணிமா மற்றும் மாயா என்ன பண்ணினாலும் கடைசி வரை நிகழ்ச்சியில் இருப்பார்கள் என்று எல்லோருக்குமே அந்த சமயத்தில் தெரிந்தது. அதேபோல் நிக்சன் செய்த தவறான விஷயங்கள் எதற்குமே நிகழ்ச்சி தரப்பிலிருந்து கேள்வி எழுப்பவில்லை. குறிப்பாக வினிஷா தேவி பற்றி நிக்சன் பேசியதை திரையிட்டு காட்டிய சேனல் அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறலாம்.

வினுஷா குறித்து:

மேலும், நிகழ்ச்சி ஆரம்பத்தில் வினிஷா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை, கன்டென்ட் கொடுக்கவில்லை என்று போட்டியாளர்கள் கூறியிருந்தார்கள். அதற்குப்பின் இவர் விளையாட ஆரம்பித்தபோது இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார்கள். குறிப்பாக, நிக்சன் இவரை உருவ கேலி செய்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அந்த சமயத்தில் வினுஷாக்கு ரசிகர்கள் இடையே பயங்கர சப்போர்ட் இருந்தது. வினுஷாவை பற்றி தவறாக பேசிய நிக்சன் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும், நெட் கார்டு கொடுக்க வேண்டும் என மக்கள் புழம்பி தவித்தார்கள்.

-விளம்பரம்-

உரிமை குரல்:

அதாவது வினிஷா வெளியில் இருந்து கொண்டு நிக்சன் செய்த தவறுக்கு கமல்ஹாசன் குரல் கொடுக்க வேண்டும். விஜய் டிவி குரல் எழுப்ப வேண்டும் என உரிமை குரல் வினுஷா எழுப்பியது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் இது குறித்து வினுஷா, நிக்சன் மற்றும் மற்ற போட்டியாளர்களிடம் பேசியிருந்தார்.

விஜய் டிவி சீரியலில் வினுஷா:

தற்போது ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், விஜய் டிவி சீரியலில் ஒப்பந்தமாகி இருக்கிறார் வினுஷா. சின்னத்திரை நடிகர் சித்தார்த், தமிழும் சரஸ்வதியும் சீரியலின் வில்லன் அர்ஜுன் ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் ‘ பனி விழும் மலர்வனம்’ என்ற சீரியலில் வினுஷா லீட் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த அநீதிக்கு, அவர் விஜய் டிவி பக்கமே வந்திருக்கக் கூடாது என்று ரசிகர்கள் புலம்பித் தள்ளுகின்றனர். மேலும் சிலர் இவர்களுக்காக பொங்கும் ரசிகர்களின் நிலைமை பாவம் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement