ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று (ஜூன் 23) கோலாகலமாக துவங்கியது. ஆரம்ப நாளான நேற்று உலக நாயகன் கமல், போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதில் மக்களுக்கு பரிட்சயமான போட்டியாளர்களும், இதுவரை கண்டிறாத போட்டியாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் நடன இயக்குனர் சான்டி. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக அறிமுகமானவர் சாண்டி.

இதையும் படியுங்க : Bigg Boss 3 Tamil : இது ஒரு அவள நிலை.! சேரனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் பாத்திமா.! ரயிட்டு.!

Advertisement

மேலும், மாஸ்டர் சாண்டி நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சாண்டி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு, சாண்டியின் முன்னாள் காதலியான காஜல் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துளளார். அதோடு, சாண்டியுடன் ஏற்பட்ட காதல் முறிவிற்கான காரணத்தையும் கூறியுள்ளார் காஜல் .

Advertisement

அதற்காக ரசிகர் ஒருவர், சாண்டி காஜல் பசுபதியின் முதல் காதல் என்று நெட்டிசன்கள் கூற, அதற்கொரு பதிலளித்த காஜல்’சண்டி பர்ஸ்ட் லவ் இல்லை, கடைசி லவ் தான் , நான் அட்டகத்தி தினேஷ் மாதிரி’ என்று பதிலளித்தார். மேலும், சாண்டியுடன் காதல் முறிந்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார் காஜல்.

Advertisement

அதில், பிரேக்கப்பா, அது பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதில் கூறியுள்ளார். மேலும், இப்போது நான் வில்லை என்றும் கூறியுள்ளார். காஜலின் இந்த வெளிப்படையான குணத்தை கண்டு அனைவரும் அவரை டான் என்று புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement