விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா என்று 8 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறி இருந்தார். இந்த சீசனில் எண்ணற்ற பிரபலமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சீசனில் எக்கச்சக்க விஜய் டிவி பிரபலங்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித்தும் ஒருவர்.

திருச்சியை சேர்ந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 3 -யில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர் இந்த சீசனில் இவர் பாடிய ரோஜா ரோஜா, போ நீ போ, உயிரே உயிரே போன்ற பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டது. மேலும், இந்த சீசனில் ஆஜீத் காலிக்கு Most Stylish Singer என்ற விருது கூட வழங்கப்பட்டது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு திக்கி தெணறது தேவதை (Thikki Thenarudhu Devatha) என்ற ஆல்பம் பாடலை பாடி இருந்தார்.

இதையும் பாருங்க : ஆரியுடன் நான் இருக்கிறேன், அவர் தான் வெற்றி பெறுவார் – ஓப்பனாக கூறிய பிக் பாஸ் 3 நடிகை.

Advertisement

அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று. இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் மூன்றாவது வாரமே வெளியேற்றப்பட்டார். ஆனால், அப்போது இவருக்கு கிடைத்து இருந்த Eviction Free Pass மூலம் தப்பித்துவிட்டார். அதன் பின்னர் இவர் ஒரு சில வாரங்களில் நாமினேஷனில் இடம்பெற்றாலும் அந்த வாரம் இவரை விட மக்களை வெறுப்பேற்றிய போட்டியாளர்கள் மீது கவனம் போனதால் இவர் எலிமினேஷனிலிருந்து தப்பித்துவிட்டார்.

இப்படி ஒரு நிலையில் தான் நேற்றய நிகழ்ச்சியில் இவர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆஜீத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆஜீத் பேசுகையில், லாக்டவுனுக்கு முன் நான் சில ஆல்பம் பாடல்களை செய்து கொண்டு இருந்தேன். அதே போல ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸ்ஸில் கூட நடித்து வந்தேன். ஆனால், அது இரண்டும் லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக நின்றுவிட்டது என்று கூறியிருந்தார். எனவே, தற்போது அதன் வேலைகளை கூட அவர் துவங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement