தனது உண்மையான மகளை நெஞ்சில் அணைத்தபடி நிம்மதியாக உறங்கிய சேரன்.! வைரல் புகைப்படம்.!

By Rajkumar · 27/9/2019

சேரன் அவர்கள் தென்னிந்தியா தமிழ் திரைப்படத் துறையில் பல சாதனைகளை புரிந்து உள்ளார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய மூன்று திரைப்படங்கள் தேசிய விருதையும் பெற்றுள்ளது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சேரன் பங்கு பெற்றார்.

மேலும், தன்னுடைய விடாமுயற்சியாலும் நம்பிக்கையாளும் 90 நாட்கள் அந்த வீட்டில் இருந்து வந்தார். இதுவரை அந்த பிக்பாஸ் வீட்டில் வயது அதிகம் உள்ள போட்டியாளர்கள் இவ்வளவு நாட்கள் இருந்ததில்லை என்ற ரெக்காடை முறியடித்து விட்டார். சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை லாஸ் லியாவை தான் மகளாக பாவித்து வந்தார்.

இதையும் பாருங்க : மலேசியாவில் ஏன் இபப்டி ஒரு கேவலமான நபரை வைத்திருக்கிறீர்கள்.! நேரலையில் சொன்ன அபிராமி.! ஷாக்கிங் வீடியோ.!

சேரனுக்கு இரண்டு மகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சேரனின் இளைய மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்ற போது லாஸ் லியாவிடம் பேச வேண்டாம். அப்படி பேசினால் நீங்கள் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறி இருந்தார். இதற்க்கு முக்கிய காரணமே லாஸ்லியா பல முறை சேரன் விட்டு கொடுத்தால் தான்.

இருப்பினும் இறுதி வரை சேரன் லாஸ்லியாவை விட்டு கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சேரன் தனது மகளுடன் அணைத்து கவலைகளுடன் நிம்மதியாக உறங்கி கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full