விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது. தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர்.
கடந்த மூன்று சீசனில் இல்லாத அளவு இந்த சீசனில் தான் எக்கச்சக்க விஜய்டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ஷிவானியும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சிவானி சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது என்னவோ சமூக வலைத்தளத்தில் இவர் பதிவிட்ட அரைகுறை ஆடை புகைப்படங்களால் தான்.
இதையும் பாருங்க : அடுத்தவங்க உழைப்புல பெருமை தேடிக்கிறீங்க, என்ன மனுஷன் நீங்க – நேற்று ஆரி செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக நடிகை சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவரை பக்கத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள் தன்னுடைய ரசிகர்களை நம்பி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஷிவானிக்கு சமூக வலைதளத்தில் கிடைத்த ஆதரவு பிக் பாஸ் வீட்டில் கிடைக்க தவறியது அதற்கு முக்கிய காரணமே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதற்காக பங்குபெற்ற என்பதையே மறந்து விட்டார் சிவானி.
வீடியோவில் 5 : 40 நிமிடத்தில் பார்க்கவும்
அவ்வளவு ஏன் கடந்த வாரம் நடைபெற்ற Freeze Task-ன் போது பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற இவரது அம்மா கூட இவர் விளையாடிய லட்சணம் குறித்து கூறி திட்டித்தீர்த்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யா தாத்தா இவரை irritating என்று கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யாவிடம் பிக் பாஸ் 4ல் யார் ஏரிச்சாளான போட்டியாளர் என்று கேட்டதற்கு ஷிவாணியின் பெயரை கூறியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.