பிக் பாஸ் கதவ தோரங்க.! 2-வது நாளே ஸ்ரீசாந்த் செய்த கலவரம்..!

By Ajju · 19/9/2018
தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒலிபராகி வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் கடந்த செப்டெம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. [embed]https://www.instagram.com/p/Bn3Ba4AHwx-/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again[/embed] இந்த 12 வது சீசனை பாலிவுட் நடிகர் சால்மான் கான் தான் தொகுத்து வழங்க வருகிறார். இவர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் 8 சீசன்களை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் இந்த சீனில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் ஐ பி எல் சூதாட்டத்தால் கிரிக்கெட் விளையாட தடை பெற்றார். மேலும், இவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் என்ற பெயரெடுத்தவர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டே நாளில் சக போட்டியாளர்களிடம் சண்டையிட்டுள்ளார் ஸ்ரீசாந்த். அதுமட்டுமல்லாமல் தர குறைவான வார்தைகளை பேசியோதோடு கதவை திறங்க நான் வெளியே போகிறேன் என்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளார் ஸ்ரீசாந்த். பிக் பாஸ் ஆரம்பித்த இரண்டே நாளில் இப்படி என்றால் மீதமுள்ள நாட்களை இன்னும் எப்படித்தான் ஸ்ரீசாந்த் தாக்கு பிடிக்க போகிறாரோ என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full