பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த மாதம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 21 பேர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முடிவில் அசீம் டைட்டிலை வென்றார்.

ஆனால், கடந்த பிக் சீசனில் வேஷ பாட்டிலாக தான் இருந்தார் ஜனனி. ஆரம்பத்தில் இவருக்கு இளசுகள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், போக போக இவர் கேமில் சரியாக கவனம் செலுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் இவர் அமுதவானனுடன் சேர்ந்து குரூப்பீசம் செய்து விளையாடியது தான் இவரது வெளியேற்றத்தற்கு முக்கிய காரணம் என்றே ரசிகர்கள் பலரும் இவர் வெளியேறியவுடன் பேசிய நேரலையில் கூறினார்கள்.

Advertisement

பிக் பாஸ் ஜனனி :

இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத பல புது நபர்களை போட்டியாளராக களமிறங்கி இருந்தனர். அதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஜனனியும் ஒருவர். இவர் மீடியா துறையில் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

ஜனனி அமுதவாணன் ;

நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிஇருந்தது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்தார் என்ற விமர்சனமும் எழுந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வந்தார்.

Advertisement

மேலும், இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகி வந்தார். freeze taaskகில் அமுதவாணன் மனைவி உள்ளே சென்ற போது கூட இவர்கள் இருவரின் உறவு குறித்து சந்தேக கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய அமுதவானன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் ஜனனிக்கு எனக்கும் இடையே உள்ள உறவு எங்களுக்குமட்டும் தான் தெரியும் என்று கூறினார். இதனால் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்தனர்.

Advertisement

கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4 :

இந்நிலையில் ’கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சியில் விக்ரமன், அமுதவாணன், ஷிவின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஸ்ருதிகா ஆதிவாணனிடம் திருமணம் ஆகிவிட்டதா என கேட்க. ஷிவின் ஆகிவிட்டது 3 குழந்தைகள் இருக்கிறது என கூற நடுவராக இருக்கும் ஸ்ருதிகா அமுதவாணனிடம் ஜனனியை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன் என்று அப்படியே உளறிவிட்டார்.

ஸ்ருத்திகாவை வச்சி செய்த ஜனனி :

இந்த நிலையில் இந்த வாரத்திற்காக கலக்கப் போவது யாரு ப்ரோமோ வெளியாகி இருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமுதவாணன், தனலட்சுமி, ஜனனி ஆகியோர் கலந்துகொண்டார். அப்போது அசார் மிமிக்ரி செய்து காட்டிக் கொண்டிருக்க, அதை பார்த்துவிட்டு ஜனனியும் சிம்பு போல பேசி இருந்தார். அப்போது ஸ்ருதிக்காவை பார்த்து ‘வந்தோமா பக்கத்துல இருக்கறவங்கள பேசு விடாம கெக்பெக்கனு சிரிச்சமா, பேமெண்ட வாங்கி பேனோம்மானு இல்லாம அமுதவாணன் யார் கூட பேசுனீங்க, ஜனனி ஜனனி லவ் பண்ணீங்களானு கேக்கறது’ என்று ஸ்ருதிக்காவை வச்சி செய்துள்ளார்.

Advertisement