ஜூலி சொன்ன அந்த வார்த்தை ? சரியா , தவறா நீங்களே சொல்லுங்கள்!
ஜல்லிக்கட்டில் ஒரு கோசத்தோடு ஆரம்பித்த ஜுலியின் பிரபலம், அவரை வீரத் தமிழச்சி என வைத்துக் கொண்டாட அந்த போராட்டம் முடியும் வரை ஜுலியின் பெயர் அடிக்கடி ஒலித்தது.
ஜல்லிக்கட்டில் அரசியல்வாதிகளை எதிர்த்து கோஷம் போட்டதால் அவரை கொன்றுவிட்டனர் என ஓது வதந்தி பரவ, நான் உயிரோடு தான் இருக்கிறேன் என தனது பேஸ்புக் பக்கத்தில் அப்பாவியாக ஒரு வீடியோ பதிவிட்டார்.
மீண்டும் அவர் பிரபலமாக, தமிழில் முதல் முறையாக அரங்கேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த பிரபலத்தை வைத்து கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருமே சினிமா பிரபலங்கள், இதனால் மக்கள் பிரதிநிதியாக பார்க்கப்பட்டார் ஜூலி.
[embed]https://www.facebook.com/imsaiarasun/videos/1748513728506735/ [/embed]
ஒரு போராட்டத்திற்கு , டி சர்ட் ஜீன்ஸ் அதுவும் வெள்ளை உடை உடுத்தி போராட்டம் செய்துகொண்டிருக்கும் அங்கு சென்று, டி சர்ட் ஜீன்சுடனும் கையில் பந்தாவக ஒரு ஹேண்ட்பேக்குடனும் சென்று நானும் உள்ளே செல்கிறேன் எனக் கேட்டுள்ளார்.சுதாரித்துக் கொண்ட போலீஸ், 'நீ வந்து நாலு போட்டோம் எடுத்துட்டு போக எல்லாம் உள்ள விட மாட்டோம்' எனக் கூறி வெளியே அனுப்பிவிட்டுள்ளனர். அதன் பின், அவரிடம் பேட்டி எடுத்து செய்தியாளர்களிடம்,
'சாதாரண கூலி வேலை செய்பவர்கேளுக்கே 500 ரூபாய் சம்பளம், ஆனால் நர்ஸுகளுக்கு 300 தன்' என பதிலளிக்கிறார். அது என்ன சாதாரண கூலி வேலை? யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் வேலை அவர்களுக்கு பெரிது தான், கூலி வேலை செய்பவர்கலாய் சாதாரணமானவர்கள் எனக் கூற ஜூலிக்கு யார் உரிமை கொடுத்தது? அதுவும் போது வெளியில் வந்து சாதரண கூலி வேலை செய்பவர்கள் என்று கூறும் தைரியம் எங்கிருந்து வருகிறது ஜூலிக்கு. அந்த வக்கிரமும் எதையும் வஞ்சகமாக பார்க்கும் ஜூலியை இப்படி திட்டித் தீர்ப்பதில் தப்பு இல்லை என்றே தோன்றுகிறது.