விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் கவின். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிகராகவும், சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.கவின் பீசா, இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் போன்ற படங்களில் கௌரவ வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவருடைய நடிப்பில் “நட்புன்னா என்னன்னு தெரியுமா” படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மேலும், விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியலில் சூப்பர்ஹிட் சீரியலாக இருந்தது “சரவணன் மீனாட்சி” தான். அந்த சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக கவின் அவர்கள் நடித்திருந்தார்.மேலும், வேட்டையன் என்று சொன்னாலே போதும் பசங்களை விட பொண்ணுங்களுக்கு தான் ரொம்ப அதிகம் பிடிக்கும்.

அந்த அளவுக்கு கதாபாத்திரத்தில் கவின் நடித்திருந்தார்.இதனால் கவினுக்கு சினிமாத் துறையில் படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆகவே கவின் அந்த சீரியலை பாதியிலேயே விட்டுவிட்டு “நட்புன்னா என்னன்னு தெரியுமா” என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால், படம் ஷூட்டிங் முடிந்தும் ரிலீஸ் ஆகாமல் வருடக்கணக்கில் தள்ளிப் போய்க் கொண்டு இருக்கிறது. என்ன? காரணம் தெரியவில்லை .ஆனால், ஆரம்பத்தில் பல தயாரிப்பாளர்கள் படவாய்ப்புக்காக அவரை தேடி வந்தாலும், முதல் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனதால் வந்த வாய்ப்புகள் எல்லாம் “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது” என்ற பழமொழிக்கு ஏற்ப தட்டி போனது. இதனால் கவின் மனமுடைந்து ஒரு பிரபல இயக்குனரிடம் அசிஸ்டெண்ட் ஆக வேலைக்கு சேர்ந்தார்.

இதையும் பாருங்க : அஜித் தனது வீட்டில் அமைத்துள்ள புதிய செட்டப்.! இனி இதுக்கும் போக மாட்டாரா.!

Advertisement

மேலும், இவர் உதவி இயக்குனர் வேலையில் சேர்ந்ததில் இருந்து சரியான உணவு, தூக்கம் இல்லாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு முன்பு இருந்ததை விட தற்போது ஒல்லியாகவும் ஆனார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படம் தியேட்டர்களில் ரிலீஸானதை தொடர்ந்து அப்போது திரையரங்குகளில் பிரபலங்களின் படங்கள் வெளியே வந்ததால் அந்த படங்களுடன் மோதி அவரால் அதிக வெற்றி பெறவில்லை. மேலும், இந்த படத்தின் மூலம் அதிக வசூலும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளிவந்தது. இந்தநிலையில் கவின் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். கவின் தன்னுடைய திறமையாலும், முயற்சியாலும், நம்பிக்கையாலும் 90 நாட்கள் வீட்டில் இருந்தார்

.அதுமட்டுமில்லாமல் மக்கள் மனதை கவர்ந்த போட்டியாளர் என்பதால் கவின் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் செய்த ஒரு சில தப்பையும் மன்னித்து அவரை இந்த வீட்டில் இவ்வளவு நாட்கள் வைத்து இருந்தார்கள் என்ற தகவலும் இணையங்களில் வெளிவந்தது. ஆனால் பிக்பாஸ் குழு திடீர் என்று இப்போதே இந்த வீட்டை விட்டு வெளியே போகும் நபருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்படும் என்று கூறியவுடன் கவின் வெளியே செல்ல முடிவெடுத்தார்.மேலும், அவர்கள் நட்புக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து மக்களுக்கும் ,பல பிரபலங்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதிலும் பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் ஆக கவிஞனுக்கு நிறைய வாய்ப்பிருக்கு என்ற கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement
Advertisement