விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சொல்லப்போனால் இந்த சீசனுக்கு முன்னாள் ஒளிபரப்பான இரண்டு சீசன்களை விட இந்த சீசன் தான் மிகவும் ஹிட் அடைந்தது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் அந்த வகையில் கவினும் ஒருவர். கவின் அவர்கள் படிக்கும் போதே ஆர்.ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார்.

சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும், நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். சரவணன் மீனாட்சி சீரியலில் ‘வேட்டையன்’ என்கிற சரவண பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இதையும் பாருங்க : வீட்டுக்கு கண்டிப்பா வரேன் டா. லோகேஷை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஜய் சேதுபதி. வீடியோ இதோ.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுடைய வாழ்க்கையே மாறியது என்று சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவினுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் படை, ரசிகர்கள் மன்றம் என ஆரம்பித்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினுக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை தனது பட வாய்ப்புகள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் கவின் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Advertisement

EKaa நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தினை புதுமுக இயக்குனர் வினீத் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே போல இந்த படத்திற்கு லிப்ட் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்பதை இன்னும் இரண்டு நாளில் பார்த்துவிடலாம்.

Advertisement
Advertisement