பிரபல பிக் எப் எம் ரேடியோ நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்தவர் மமதி சாரி. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஹலோ தமிழகம் ” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் எங்கு இருக்கிறார் என்னவானார் என்பதே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் உடல் உறுப்புதானம் செய்தவர், பிறரையும் உடல் உறுப்புதானம் செய்ய வலியுறுத்துகிறார்.  

இதையும் படிங்க: 6 வருடம் லிவ்விங் டு கெதர்.! தோழியின் கணவன்.! இரண்டாவது திருமணம்.! விவாகரத்து குறித்து மமதி

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள மமதி, கடந்த வாரம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். அதில், பிளாஸ்டிக் சர்ஜரி முறையை எளிமையாகவும், குறைந்த செலவிலும் செய்வது தொடர்பாக, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பயிற்சியளித்தனர்” என்கிற மமதி சாரிக்கு, உடல் உறுப்புதானம் செய்யும் எண்ணம் நீண்ட நாள்களாக இருந்துள்ளது. ஆனால், அதற்குச் சரியான வழிமுறைகள் தெரியாமல் இருந்துள்ளார். 

என் உடல் உறுப்புகள் பலர் உயிர்வாழ உதவும் என்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. எல்லோரும் உடலுறுப்பு தானம் செய்ய முன்வாருங்கள். இறப்புக்குப் பிறகும் உயிர்வாழ்வோம். தற்போது எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் உடல் உறுப்பு தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன்” என்கிறார் மமதி. 

Advertisement

Advertisement
Advertisement