பிரபல பிக் எப் எம் ரேடியோ நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்தவர் மமதி சாரி. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஹலோ தமிழகம் ” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
மக்களின் அபிமானத்தை பெறாத மமதி சில வாரங்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றபட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மமதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதை குறித்தும், தனது சொந்த வாழ்வில் நடந்த சில பிரச்சனைகள் குறித்தும் மனந்திறந்து பேசியுள்ளார்.
சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்துள்ளார். மமதி சாரி ஏற்கனவே திருமணமான ஒரு நபரை தான் திருமணம் செய்துகொண்டுள்ளாராம். வெளி மாநிலத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் பெற்றவராம் , அவரது முன்னாள் மனைவி மமதி சாரியின் தோழி தானம். அவரது அனுமதி பெற்ற பின்னரே மமதி அந்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய மமதி “எங்கள் உறவு அன்பால் நிறைந்து இருந்தது. ஆறு ஆண்டுகள் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தோம். பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டு ஒரு ஆறு ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்தோம். அதன் பின்னர் 2014 ஆண்டு எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது. ஒரு பெண்ணால் ஆண் துணை இல்லாமல் வாழ முடியாத என்ன?” என்று கொஞ்சம் கர்வமாகவே தெரிவித்திருந்தார் மமதி சாரி.